INDIAN 7

Tamil News & Polling

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அரசியல் கருத்து கணிப்பு விளையாட்டு சினிமா விடுகதைகள் நடிகைகள்

ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் மீது தெலுங்கு தேசம் தாக்குதல்! பழிக்கு பழி

ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் மீது தெலுங்கு தேசம் தாக்குதல்! பழிக்கு பழி
ஜூன் 08, 2024 | 01:39 am | Views : 36

ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் கோடாலி நானி, முன்னாள் எம்.எல்.ஏ. வல்லபனேனி வம்சி ஆகியோர் வீட்டிற்கு தெலுங்கு தேச கட்சியினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த முயன்றனர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர் பின்னர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னம் பேனை கயிறு கட்டி தறையில் இழுத்து சென்றனர். ராஜமுந்திரி மோரம்பூடி மேம்பாலத்தை பார்வையிட தெலுங்கு தேசம் கட்சியின் நகர எம்எல்ஏ ஆதிரெட்டி வாசு சென்றபோது கடந்த ஆட்சியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து தற்போது நடந்த தேர்தலில் ராஜமுந்திரி எம்.எல்.ஏ.வாக நின்று தேல்வியடைந்த பாரத் பெயர் எழுதப்பட்ட இருந்ததால் மோரம்பூடி மேம்பாலம் கல்வெட்டு பலகையை தெலுங்கு தேசம் கட்சியினர் அடித்து உடைத்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருடன் வாக்குவாதம் நடந்தது.தெலுங்கு தேசம் கட்சியினரின் கிளர்ச்சியால் போலீசார் அமைதியாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அனந்தபுரம் ஸ்ரீகிருஷ்ண தேவராய பல்கலைக்கழகத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு ஒய்.எஸ்.ஆர். சிலை பல்கலைகழக ஆட்சிமன்றத்தின் அனுமதியின்றி சிலை நிறுவப்பட்டதாக கூறி மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால் ஒய்.எஸ்.ஆர். சிலையை அதிகாரிகள் அகற்றினர்.

திருப்பதி மாவட்டம் பெதலக்குரு மண்டலம் சில்லகுரு கிராமத்தில் துவ்வூர் விஜய் சேனா ரெட்டி தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தெலுங்கு தேச கட்சி தலைவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி கொண்டிருந்த போது, ​​ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமிரெட்டி சத்யநாராயண ரெட்டியின் ஆதரவாளர்கள் விஜய் சேனா ரெட்டி மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் காயமடைந்தவர்கள் நாயுடுபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.



இதேபோன்று மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பல இன்னல்களை சந்தித்தவர்கள் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பழிக்கு பழிவாங்கி வருகின்றனர். இதனால் பல இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக வெளி ஊர்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

Keywords: TELUGU DESAM PARTY YSR CONGRESS ஆந்திரா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மோதல் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி ஜெகன் மோகன் ரெட்டி இந்தியா டாப் நியூஸ் டிரெண்டிங்

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

விடுகதை :

சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?


விடுகதை :

ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


விடுகதை :

மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?


திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

2024-07-25 03:11:28 - 2 days ago

திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!
கடந்த 2020-ம் ஆண்டு முதன்மை செயலாளர் தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக தயாநிதி மாறன் பேசியிருந்தார். இதையடுத்து தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தயாநிதி மாறன் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் மீது


பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!

2024-07-22 03:40:09 - 5 days ago

பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!
பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அறவழியில் போராட்டம் நடத்திய,


நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்

2024-07-22 01:51:11 - 5 days ago

நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்
கடலூர்,கடலூரில் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சினிமா படங்களில் 2-ம் பாகம் தோல்வியடைவது குறித்து கருத்து கேட்கிறீர்கள். மக்களின் ரசனைக்கு ஏற்றபடி படம் இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள். அந்த படங்கள் தான் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? 2 ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. கடந்த அரசும்,


அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு

2024-07-22 01:48:42 - 5 days ago

அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார்.


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2024-07-16 11:19:19 - 1 week ago

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென் நெற்குணம் கிராமத்தில் தாத்தா, பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழு வயது மற்றும் ஒன்பது வயது சிறுமிகளை கடந்த 2017


குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!

2024-07-16 09:44:26 - 1 week ago

குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!
குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பழைய காரில் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஆண்டு லண்டனுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர். 1950-ம் ஆண்டுகளில் அறிமுகமான அந்த


நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது

2024-07-16 08:52:54 - 1 week ago

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.


மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

2024-07-16 08:00:54 - 1 week ago

மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மாதம் ஒரு முறை மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை பயனடையலாம் என்றும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக,


Follow Me

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.