ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா 2வது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து 3வது போட்டியில் அமெரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்திய இந்தியா குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.
இருப்பினும் இந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 1, 4, 0 ரன்களில் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. கடந்த உலகக் கோப்பைகளில் 3வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ள அவர் 2 தொடர்நாயகன் விருதுகளை வென்றுள்ளார். ஆனால் இந்த உலகக் கோப்பையில் அவர் துவக்க வீரராக விளையாடி வருகிறார்.
குறிப்பாக ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபி அணிக்காக துவக்க வீரராக விளையாடிய விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை வென்றார். அதனால் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி நிர்வாகம் அவரை துவக்க வீரராக களமிறக்கியுள்ளது. ஆனால் அந்த முடிவு இதுவரை இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதகமாக அமைந்துள்ளது. அதனால் அவரை 3வது இடத்தில் மீண்டும் களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ள.
இந்நிலையில் விராட் கோலி – ரோஹித் சர்மா ஆகியோர் தொடர்ந்து துவக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். ஏனெனில் விராட் கோலி சுமாராக விளையாடினாலும் இந்தியா இதுவரை வெற்றி கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே வெற்றி நடை போடும் அணியில் மாற்றத்தை செய்யக்கூடாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் இடது வலது கை பேட்ஸ்மேன்களை பயன்படுத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு இருக்கிறது. இம்முறை அங்கே அவர்கள் 2 மகத்தான வீரர்களை பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவுக்காகவும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை அவர்கள் களமிறக்கியுள்ளனர். ஆனால் நீங்கள் சொல்வது போல் விராட் கோலி கொஞ்சம் கீழே வந்தால் அது அப்சட்டை ஏற்படுத்தும்”
“தற்போது கொண்டுள்ள இதே கலவைக்கு அந்த 2 வீரர்களுக்கும் இந்தியா ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் இந்த தொடரில் ஏதோ ஒரு தருணத்தில் பேட்டிங்க்கு சாதகமான சூழ்நிலைகள் வரும். அமெரிக்காவில் அது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே நீங்கள் வெற்றி பெறும் போது மாற்றம் செய்ய வேண்டும் என்று நான் நம்பவில்லை” எனக் கூறினார்.
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
கட்டாக் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 305 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய
இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 81 ரன்கள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!