தமிழ் புதிர்கள், விடுகதைகள் - Tamil Vidukathaigal


பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?


தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?


வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?


கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?


வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?


உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?


சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?


முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?


யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?


பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?


உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?


டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.


ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?


பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?


இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?


மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?


பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?


வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?


உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?


பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?


100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?


வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?


கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share