தமிழ் புதிர்கள், விடுகதைகள் - Tamil Vidukathaigal


உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?


எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?


பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?


வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?


உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?


இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?


இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?


கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?


ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?


வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?


கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?


காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?


படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?


சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?


உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?


சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?


நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?


பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share