தமிழ் புதிர்கள், விடுகதைகள் - Tamil Vidukathaigal


கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?


சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?


உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?


ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?


நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?


வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?


சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?


உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?


பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?


யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?


படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?


காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?


தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?


கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?


அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?


முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?


கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?


பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?


ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?


பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?


பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?


ஒரு கூடையில் ஆறு ஆப்பிள் இருந்தன. அங்கு இருந்த 6 சிறுவர்களுக்கும் 6 பழங்கள் கொடுத்துவிட்டனர். ஆனால் கூடையில் ஒரு பழம் இருந்தது அது எப்படி?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share