வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
![]() |
![]() |
![]() |
![]() |
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
ஒரு கூடையில் ஆறு ஆப்பிள் இருந்தன. அங்கு இருந்த 6 சிறுவர்களுக்கும் 6 பழங்கள் கொடுத்துவிட்டனர். ஆனால் கூடையில் ஒரு பழம் இருந்தது அது எப்படி?
ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?
பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
« Prev   Home   Next »