தமிழ் புதிர்கள், விடுகதைகள் - Tamil Vidukathaigal


சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?


அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?


வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?


தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?


இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?


எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?


யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?


ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?


முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?


ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?


கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?


உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?


தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?


உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?


அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?


கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?


வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?


ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?


ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share