தமிழ் புதிர்கள், விடுகதைகள் - Tamil Vidukathaigal


காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?


வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?


உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?


கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?


சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?


உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?


கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?


இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?


எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?


உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?


சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?


பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?


கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?


கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?


தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?


வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?


எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?


வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?


வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?


காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?


அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?


படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?


அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share