தமிழ் புதிர்கள், விடுகதைகள் - Tamil Vidukathaigal


அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?


அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?


எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?


கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?


கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?


காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?


இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.


யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?


சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?


எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?


ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?


தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?


பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?


பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?


காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?


தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?


உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?


இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?


படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?


பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?


பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share