அர்ஜென்டினாவில் தவித்த 30 சிங்கம் மற்றும் புலிகளுக்கு சுதந்திரம்: தென்ஆப்பிரிக்கா, அமெரிக்காவுக்கு மாற்றம்

அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் (Buenos Aires) நகரில் இருந்து தென்மேற்கே 70 கிமீ தொலைவில் லுஜான் என்ற மிருகக் காட்சி சாலை இயங்கி வந்தது. இந்த Zoo கடந்த 2020-ந்தேதி சுகாதாரமற்ற நிலையில் இயங்குவதாக குற்றம்சாட்டப்பட்டு மூடப்பட்டது. அப்போது 200-க்கும் மேற்பட்ட சிங்கம் மற்றும் புலிகள் வசித்து வந்தன.

இந்த காட்டு விலங்குகள் மிகவும் சிரமமான, கான்கிரீட் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருந்தன. பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த விலங்குகளை சுகாதாரமான வனவிலங்கு சரணாலயங்களில் சுதந்திரமாக நடமாட நடவடிக்கை எடுத்தன. Four Paws என்ற அமைப்பு முயற்சி மேற்கொண்டதில் தற்போது 30 சிங்கம் மற்றும் புலிகள் தென்ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு இடம் பெயர உள்ளன.

சர்வதேச விலங்கு நல அமைப்பான Four Paws உதவியுடன் கடந்த 2023-ம் ஆண்டு பல விலங்குகள் மற்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும், பல விலங்குகள் அங்கேயே துன்பத்தை அனுபவித்து வந்த நிலையில், தற்போது இதே அமைப்பு 30 சிங்கம் மற்றும் புலிகளை தென்ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு மாற்றுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

பெரிய வகையிலான கூண்டுகள் வரவழைக்கப்பட்டு, விலங்குகள் அதில் அடைக்கப்பட்டு தென்ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. சிங்கம் மற்றும் புலிகள் தானாகவே கூண்டுக்குள் செல்ல பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், சில சிங்கங்கள் மயக்க மருந்து செலுத்தப்பட்டே, கூண்டுக்குள் ஏற்றப்பட்டன.

இது பணி சாதாரணமானது அல்ல. தென்ஆப்பிரிக்காவுக்கு செல்ல வேண்டுமென்றால் ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் அல்லது நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் சென்று அங்கிருந்து தென்ஆப்பிரிக்கா கொண்டு செல்லப்பட வேண்டும். அதேபோல் அமெரிக்காவின் கொலராடோவுக்கு சிலி வழியாக செல்ல வேண்டும்.

லுஜான் மிருகக்காட்சி சாலையை, அர்ஜென்டினா அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் விலங்கு நலன் குறித்த கவலைகள் காரணமாக 2020-ல் மூடினர். அது மூடப்பட்டபோது அங்கு சுமார் 200 சிங்கம் மற்றும் புலிகள் இருந்தன. 2023-ல் ஒரு தீர்வைக் காண ஃபோர் பாஸ் அமைப்பு முதன்முதலில் வந்தபோது ​​112 மட்டுமே எஞ்சியிருந்தன.

இரண்டு ஆண்டுகளுக்கு பொறுப்பேற்க அனுமதிக்கப்பட்டபோது, ​​அந்த எண்ணிக்கை 62 ஆக குறைந்துவிட்டது. உடல் பருமன், தசை இழப்பு அல்லது ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, சிறைபிடிக்கப்பட்ட சில விலங்குகளால் நடக்கவே முடியவில்லை. மற்றவை பல் மற்றும் சிறுநீரக நோய்கள், நகங்களை அகற்றுவதால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சரியாக ஆறாத காயங்களால் அவதிப்படுகின்றன. அதுவே, அங்கு நிலவும் நெரிசலின் அளவையும், இந்த விலங்குகள் அனுபவித்த நிலைமைகளையும் காட்டுகிறது

இவ்வாறு டி'அப்ராமோ தெரிவித்தார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel