நடிகை கஸ்தூரிக்கு எதிராக மதுரை காவல் ஆணையரிடம் நாயுடு மகாஜன சங்கம் புகார்!

By Admin | Published in செய்திகள் at நவம்பர் 05, 2024 செவ்வாய் || views : 201

 நடிகை கஸ்தூரிக்கு எதிராக மதுரை காவல் ஆணையரிடம் நாயுடு மகாஜன சங்கம் புகார்!

நடிகை கஸ்தூரிக்கு எதிராக மதுரை காவல் ஆணையரிடம் நாயுடு மகாஜன சங்கம் புகார்!

மதுரை: நடிகை கஸ்தூரிக்கு எதிராக மதுரை மாநகர காவல் ஆணையரிடம் தமிழக நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர்.

தமிழக நாயுடு மகாஜன சங்கம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் ரமேஷ், மற்றும் போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் ஒன்றில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் எந்த மொழி, இன பாகுபாடின்றி அனைவரும் சமமாக அமைதி, ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். கடந்த 3ம் தேதி நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் இனமான எங்களது நாயுடு குல சமுதாய பெண்களை இழிவுச்சொல் கூறியும், இன குலத்தோர், நாடாண்ட மன்னர்களையும் இழிவுப்படுத்து நோக்கிலும் பேசியுள்ளார். தமிழக மக்களிடம் பிரிவினை, இனப்பிரச்சினையை தூண்டிவிடும் உள்நோக்கத்தோடு சாதிய இழிச் சொற்களை பேசி, எங்களது சமுதாய மக்களை மிகுந்த வேதனைக்கு உட்படுத்தியுள்ளார்.






அவரது சுய விளம்பரத்திற்காக, சிலரின் பின்புலத்தில் செயல்பட்டுள்ளார். ஒற்றுமையுடன் வாழும் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி, சட்டம், ஒழுங்கை சீர் கெடுக்கும் எண்ணத்துடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் அவச் சொற்களை அவர் பேசியுள்ளார். தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் எண்ணத்தில் செயல்பட்ட நடிகை கஸ்தூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அதில் வலியுறுத்தியுள்ளனர். நிர்வாகிகள் கூறுகையில், “நடிகை கஸ்தூரியின் பேச்சு உலகம் முழுவதும் தெலுங்கு பேசும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்காவிடின் நவ.,10ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றனர்.


நடிகை கஸ்தூரி மதுரை புகார் காவல் ஆணையர் ACTRESS KASTURI COMPLAINT MADURAI POLICE TELUGU
Whatsaap Channel
விடுகதை :

உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?


விடுகதை :

தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?


விடுகதை :

மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?


சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார் சீமான்

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார் சீமான்

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜராகவில்லை. இதையடுத்து, சீமான் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும், தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதால் நாளை (இன்று) போலீஸ்

மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!

மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!


எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?

எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?


சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!


செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !

செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !


சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next