INDIAN 7

Tamil News & polling

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - சென்னை காவல்துறை விளக்கம்

08 டிசம்பர் 2024 04:52 PM | views : 669
Nature

சென்னை அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவரை ஒரு வருடத்திற்கும் மேலாக பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிப்புக்குள்ளான மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ள குற்றவாளிகளை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 4 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணையை விமர்சிக்க வேண்டாம்.

பொதுவெளியில் விமர்சனங்களை முன்வைப்பது சாட்சியங்களை கலைத்து புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும். அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும், அவரது குடும்பத்திற்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே விசாரணையை விமர்சிக்க வேண்டாம் என காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - சென்னை காவல்துறை விளக்கம்1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபம் ஏற்ற காவல் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இது

Image சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:- சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த

Image திருவாரூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி வீட்டில் இருந்து பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். அதே பேருந்தில் மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியை சேர்ந்த கொத்தனாராக



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்