திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(45) இவரது மனைவி பெயர் சுதா(36). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சுதா, திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அங்கு உடன் பணிபுரியும் பாலசுப்பிரமணியனுடன் நெருங்கி பழகி வந்த நிலையில் இருவருக்கும் திருமணத்தை மீறிய பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த கணவர் கார்த்திகேயன் சுதாவை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கார்த்திகேயன் மீது சுதா வெந்நீரை ஊற்றியுள்ளார்.
இதனால், துடிதுடிக்கொண்டிருந்த கார்த்திகேயனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார் சுதா மற்றும் பாலசுப்பிரமணியனை தேடி வருகின்றனர். கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவர் மீது மனைவி வெந்நீர் ஊற்றிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!