INDIAN 7

Tamil News & polling

டெல்லியில் பரபரப்பு பல்கலைக்கழக மாணவிகள் 2 பேரை கடத்த முயற்சி

08 ஜூன் 2023 11:20 AM | views : 575
Nature

டெல்லியில் ஜவகர்லால் நேருபல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.நேற்று இரவு பல்கலைக்கழக வளாத்திற்குள் ஒரு மர்ம கார் வந்தது. அதில் வந்தவர்கள் 2 மாணவிகளை கடத்த முயன்றனர். ஒரு மாணவிக்கு அந்த கும்பல் பாலியல் தொந்தரவு கொடுத்தாகவும் கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன மாணவிகள் சத்தம் போட்டனர். உடனே மர்ம கும்பல் தப்பி சென்று விட்டது. இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் அபிஷேக் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளி வாகனங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாணவ-மாணவிகள் அடையாள அட்டையை காட்டிய பிறகு தான் உள்ளே செல்ல அனுமதிக்கபடுவார்கள் என அறுவுறுத்தப்பட்டு இருக்கிறது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்