கேரளாவில் இந்த முறை தாமரை மலரும்: பிரதமர் மோடி
மார்ச் 16, 2024 | 03:30 am | views : 67
தமிழகத்தில் கன்னியாகுமரியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அதன்பின்னர் மதியத்துக்கு மேல் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
சுவாமியே சரணம் ஐயப்பா என கூறியபடி அவர் பேச்சை தொடங்கினார். பிறகு அவர் பேசுகையில் கூறியதாவது:-கேரளாவில் ஊழலுக்கு பெயர் போன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சிக்கு வருகிறது. இந்த கட்சிகளை ஜனநாயக முறைப்படி ஒழிக்க மக்கள் முன்வர வேண்டும். கேரளாவில் ரப்பர் தொழில் நலிவடைந்து வருகிறது. ரப்பர் தொழிலாளர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை கண்டும் காணாதது போல் இடது ஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் நடித்து வருகிறது.
கேரளாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. கிறிஸ்தவ ஆலயங்களில் அருட்தந்தைகள் தாக்கப்படுகிறார்கள். கல்லூரிகள் கம்யூனிஸ்டுகளின் கூடாரங்களாக மாறியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் வாழ்ந்து வருகிறார்கள்.இந்தநிலை மாற வேண்டுமானால் மாறி மாறி வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளின் அரசுகள் மாற்றப்பட வேண்டும். மாற்றம் வந்தால் மட்டுமே கேரளாவுக்கு நல்லதொரு விடிவுகாலம் பிறக்கும். கேரளாவில் இந்த முறை தாமரை மலரும். 10-க்கும் மேற்பட்ட பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
தேசிய அளவில் பா.ஜனதா கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. கேரளாவில் இளைஞர்களிடையே புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அனில் அந்தோணி இளைஞர்களின் அடையாளம்.இவ்வாறு அவர் கூறினார்.
Also read... அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!
பத்தனம்திட்டா பிரசாரத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, தெலுங்கானா மாநிலம் சென்றார். அங்கு மல்காஜ்கிரி பாராளுமன்ற தொகுதியில் 'ரோடுஷோ' நடத்தினார்.காவி நிற தொப்பி அணிந்தபடி, திறந்த வாகனத்தில் நின்று கொண்டு, சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்களை நோக்கி கையசைத்து மோடி வாழ்த்து தெரிவித்தார். சிலர் பிரதமரை பார்ப்பதற்காக கட்டிடங்களின் மொட்டை மாடியில் நின்றனர்.
இந்த ரோடுஷோவின்போது சாலைகளின் இருபுறமும் திரண்டு நின்றவர்கள், 'மோடி, மோடி', 'பாரத் மாதா கி ஜெய்' போன்ற கோஷங்களை எழுப்பினர்.இன்று (சனிக்கிழமை) நாகர்கர்னூலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகிறார்.
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.
பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையைத் தொடர்ந்து பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்துச்
ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு!
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் : பிரதமர் மோடி பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமா நடந்து வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில்
கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை
வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து
நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்
அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!
அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,
நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!
நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய
கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!
கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,
குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்