தமிழ் புதிர்கள், விடுகதைகள் - Tamil Vidukathaigal


சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?


எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?


100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?


அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?


உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?


ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


ஒரு கூடையில் ஆறு ஆப்பிள் இருந்தன. அங்கு இருந்த 6 சிறுவர்களுக்கும் 6 பழங்கள் கொடுத்துவிட்டனர். ஆனால் கூடையில் ஒரு பழம் இருந்தது அது எப்படி?


பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?


யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?


பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?


காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?


வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?


பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?


ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?


கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?


பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?


உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?


தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?


காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?


தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?


உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share