தமிழ் புதிர்கள், விடுகதைகள் - Tamil Vidukathaigal


அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?


வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?


ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?


உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?


பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?


100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?


சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?


டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.


தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?


வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?


பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?


இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?


இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?


கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?


உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?


வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?


முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?


யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?


தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?


மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share