தமிழ் புதிர்கள், விடுகதைகள் - Tamil Vidukathaigal


வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?


வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?


ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?


பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?


டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.


பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?


சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?


சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?


பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?


யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?


பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?


மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?


இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?


அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?


பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?


எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?


உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share