தமிழ் புதிர்கள், விடுகதைகள் - Tamil Vidukathaigal


பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?


ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?


கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?


பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?


உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?


ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?


சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?


வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?


ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?


கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?


ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?


பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?


சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?


எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?


பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?


அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?


ஒரு கூடையில் ஆறு ஆப்பிள் இருந்தன. அங்கு இருந்த 6 சிறுவர்களுக்கும் 6 பழங்கள் கொடுத்துவிட்டனர். ஆனால் கூடையில் ஒரு பழம் இருந்தது அது எப்படி?


கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?


யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share