தமிழ் புதிர்கள், விடுகதைகள் - Tamil Vidukathaigal


உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?


கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?


தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?


காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?


தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?


முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?


காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?


அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?


எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?


ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?


யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?


முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?


பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?


ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?


ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?


எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?


பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?


பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?


நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?


வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?


பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?


தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?


உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share