தமிழ் புதிர்கள், விடுகதைகள் - Tamil Vidukathaigal


யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?


பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?


உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?


அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?


உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?


பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?


இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?


உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?


உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?


வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?


வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?


முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?


பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?


கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?


எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?


தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?


படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?


உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share