தமிழ் புதிர்கள், விடுகதைகள் - Tamil Vidukathaigal


சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?


பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?


தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?


ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?


தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?


எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?


உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?


கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?


சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?


மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?


காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?


இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.


கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?


யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?


அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?


முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?


நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?


எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?


தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share