தமிழ் புதிர்கள், விடுகதைகள் - Tamil Vidukathaigal


கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?


பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?


வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?


வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?


கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?


இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?


பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?


எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?


கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?


உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?


தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?


காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?


அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?


உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?


சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?


ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?


எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?


வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?


ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?


உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?



  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share