கொடநாடு விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதில் அரசியல் தலையீடு ஏதுமில்லை என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து
வந்தனர். சட்டப்பேரவை தொடங்கியதும் அவர்கள் கொடநாடு விவகாரம் தொடர்பாக, அரசு
பொய் வழக்குப் போடுவதாகக் கூறி அமளியில் ஈடுபட்டனர். பொய் வழக்குப் போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர்.
வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அனுமதியின்றி பேரவையில் அதிமுகவினர் பிரச்சனையை எழுப்பக் கூடாது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். பதாகைகளை கொண்டுவந்து அவையில் அதிமுகவினர் கூச்சல் எழுப்பியது திட்டமிட்ட செயல் என்றும் அதனால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவிட்டார்.
அவர்கள் சபை நடக்கும் கலைவாணர் அரங்கத்துக்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடநாடு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து சட்டப்பேரவையில் பேசினார். அப்போது, ’இந்த வழக்கின் விசாரணை, முறைப்படி நீதிமன்ற ஒப்புதலின் அனுமதியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அரசியல் தலையீடு இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினர் நடவடிக்கை உள்ளது. கொடநாடு விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசியல் நோக்கத்தோடு செய்யப் படுவதில்லை. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் எண்ணமும் இல்லை என்றார்.
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
கோவை: டெல்லி செல்வதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரிடம், டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்கிறேன். பா.ஜ.க.
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!