Tamil News & POLLING

 

இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்

6 months ago 01 செப்டம்பர் 2025 04:14 PM | views : 141
வாஷிங்டன்,

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும், கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு கடந்த 27ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், இந்தியா , அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், இறக்குமதி பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூகவலைதள பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், நாம் (அமெரிக்கா) இந்தியாவுக்கு குறைந்த அளவில் ஏற்றுமதி செய்கிறோம் என்று சிலருக்கு தெரியும். ஆனால், இந்தியா நமக்கு (அமெரிக்கா) அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றன. வேறோபோன்று கூறவேண்டுமென்றால், இந்தியா நமக்கு அதிக அளவில் பொருட்களை விற்பனை செய்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளர் நாம் தான் (அமெரிக்கா). ஆனால், அவர்களிடம் (இந்தியா) நாம் குறைவாகவே விற்பனை செய்கிறோம்.

பல ஆண்டுகளாக இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவு ஒருதலைபட்சமாகவே இருந்தது. காரணம் என்னவென்றால் அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது அதிக அளவு வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இது ஒருதலைபட்சமான பேரழிவு. ரஷியாவிடமிருந்து ஆயுதங்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றை இந்தியா வாங்குகிறது. ஆனால், குறைவான அளவிலேயே ஆயுதங்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றை நம்மிடமிருந்து (அமெரிக்கா) இந்தியா வாங்குகிறது.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரியை முழுமையாக நீக்க இந்திய அரசு முன்வந்தது. ஆனால், இந்தியாவின் முடிவு காலதாமதமானது. இந்த முடிவை இந்திய அரசு பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். இந்த உண்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AIADMK ADMK AMMK பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN TAMIL NADU PMK எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS சீமான் கனமழை பாமக இந்திய அணி தமிழகம் INDIAN CRICKET TEAM தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் காங்கிரஸ் CONGRESS UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் கைது பிரதமர் மோடி SEEMAN EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் அமமுக NELLAI KEERTHY SURESH கொலை கோவை தீபாவளி மதுரை TAMIL ACTRESS நெல்லை OPS வன்னியர் COIMBATORE திருநெல்வேலி கள்ளக்காதல் தமிழ்நாடு தென்காசி TAMILAGA VETTRI KAZHAGAM நயினார் நாகேந்திரன் ஓபிஎஸ் டாப் நியூஸ் டிரெண்டிங் ELECTION COMMISSION தமிழக அரசு THIRUMAVALAVAN AJITH பாலியல் தொல்லை NORTHEAST MONSOON TAMIL CINEMA திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் திருமாவளவன் விடுமுறை நாடாளுமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சி MADURAI ASSEMBLY ELECTIONS தேவர் THOOTHUKUDI