தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த 27 ஆம் தேதி நடந்தது. மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜயின் உரை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விஜய் பேசியது குழப்பமாக உள்ளது என்றும், கருத்தில் தெளிவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
சிலர் விஜய்யின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என்ற அறிவிப்பை வரவேற்றனர். இந்த நிலையில், த.வெ.க. மாநில மாநாட்டில் விஜய் பேசிய கருத்து குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பான கேள்விக்கு இன்று பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "இந்த விஷயம் தொடர்பாக எங்களது அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அண்ணன் பதில் அளித்துவிட்டார். அதை தவிர வேறு எதையும் கூற விரும்பவில்லை," என்று தெரிவித்தார்.
முன்னதாக விஜய் என்ன பேசினார் என்பதை பார்க்கவில்லை என்றும், பார்த்துவிட்டு பதில் அளிப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S