INDIAN 7

Tamil News & polling

பிரதமர் மோடியின் சென்னை வருகை மிக பெரிய தாக்கம் ஏற்படுத்தும்: அண்ணாமலை பேட்டி

09 ஏப்ரல் 2024 04:01 PM | views : 679
Nature

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, 7-வது முறையாக தமிழகம் வந்துள்ளார். இதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதிக்கு சென்றார். பின்னர், பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார். கையில் தாமரை சின்னம் ஏந்தி, வாகன பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, கட்சி தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2 கிலோ மீட்டர் வரையிலான இந்த பேரணியின்போது, பா.ஜ.க. வேட்பாளர்கள் பால்கனகராஜ் (வடசென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), பொன்.பாலகணபதி (திருவள்ளூர்), பா.ம.க வேட்பாளர்கள் கே.பாலு (அரக்கோணம்), ஜோதி வெங்கடேசன் (காஞ்சீபுரம்), த.மா.கா. வேட்பாளர் வி.என்.வேணுகோபால் (ஸ்ரீபெரும்புதூர்) ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.வாகன பேரணியில் பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. வேட்பாளர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும், பிரதமரின் வாகன பேரணி நிகழ்ச்சியையொட்டி அந்த பகுதி முழுவதும் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.இதன்பின்னர், பிரதமர் மோடியின் சென்னை வருகை பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது, பிரதமர் மோடி சென்னைக்கு வரும்போது, சென்னை மக்கள் தங்களுடைய சொந்த மக்களை போல் பிரதமரை வரவேற்கிறார்கள்.சென்னை மக்கள் பிரதமர் மோடியை திறந்த கரங்களுடன் வரவேற்றனர். இன்றைய வாகன பேரணியானது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதன் வழியாக தமிழகத்தின் மனநிலை தெளிவாக தெரிகிறது. மக்கள் உண்மையில் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இது ஏப்ரல் 19-ந்தேதி ஒரு பெரிய அளவில் எதிரொலிக்க இருக்கிறது என்று பேசியுள்ளார்.

இதேபோன்று, பா.ஜ.க.வின் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, பிரதமர் மோடியின் வருகை நிச்சயம் எங்களுக்கு உதவும். அவர் 3-வது முறையாக பிரதமராக வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அவர் எப்போதெல்லாம் வருகிறாரோ, தி.மு.க.வின் ரகசியம் வெளிப்படுகிறது. தமிழகத்தில் தாமரை மலரும் என்று கூறியுள்ளார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

Image சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை,

Image தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே உறுதி செய்யப்பட்டது.

Image சென்னை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-, சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

Image புதுடெல்லி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முக்கிய தேவாலயங்களில்

Image சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது.

Image திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபம் ஏற்ற காவல் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இது



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்