வடகிழக்கு பருவமழை - தேடல் முடிவுகள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இந்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது
வடகிழக்கு பருவமழை தென் கடலோர மாவட்டங்களை மிரட்டி வரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இந்த முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி செல்கின்றனர். மேலும், பக்தர்கள் பலரும் இரவு நேரத்தில் கோவில் முன் கடற்கரையில் தங்கி மறுநாள் காலை கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு செல்வது வழக்கம்.
இதனிடையே, திருச்செந்தூர் கடற்கரை
24 அக்டோபர் 2025 05:14 AM
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினந்தோறும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு மலைரெயில் பாதையில், கல்லார் ரெயில் நிலையத்தில் இருந்து குன்னூர் வரை உள்ள ரெயில் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தன. பல்வேறு
24 அக்டோபர் 2025 04:47 AM
சென்னை,
வடகிழக்கு பருவமழை, கடந்த 16-ந் தேதி தமிழகத்தில் தொடங்கியது. சற்று தாமதமாக தொடங்கினாலும், அதன் வேகம் மிக தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்ததால் அதற்கேற்ற வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
23 அக்டோபர் 2025 04:29 AM
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குறுவை நெல் சாகுபடியில் அறுவடை செய்த சுமார் 8,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மன வேதனையளிக்கிறது. அறுவடை செய்து 10
23 அக்டோபர் 2025 02:23 AM
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக பகுதிகளில் மழையை கொடுக்கும் என ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டதோடு, நிர்வாக ரீதியாக இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும்
23 அக்டோபர் 2025 01:54 AM
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என சென்னை வானிலை
22 அக்டோபர் 2025 10:41 PM
சென்னை:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 100 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும், நீர்மட்டம் 21 அடியை நெருங்குவதாலும் கூடுதலாக உபரி நீர் திறக்க அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏரியின் ஐந்து கண் மதகில்
22 அக்டோபர் 2025 09:39 AM
சென்னை:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 3 மணி நேரத்துக்குள் அதாவது காலை 8.30 மணிக்கு அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இதன்