INDIAN 7

Tamil News & polling

மழை காரணமாக சபரிமலையில் கூட்டம் இல்லை

By E7 Tamil 28 நவம்பர் 2024 05:36 AM
Nature

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்து வரும் நிலையில், தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதன் காரணமாக, மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செயது வருகின்றனர்.

வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மற்ற நாட்களில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருக்கிறது. நேற்றைய தினம் இரவு 9 மணி நிலவரப்படி 63,242 பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். அவர்களில் ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் 10,124 பேர் வந்துள்ளனர்.

இந்தநிலையில் சபரி மலையில் இன்றும் பக்தர் கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட போது, வலிய நடைப் பந்தலில் 5 வரிசையில் மட்டும் பக்தர்கள் வரிசையில் இருந்தனர். அதிகாலை 5 மணிக்கு பிறகு வலிய நடைப்பந்தலில் பக்தர்கள் காத்து நிற்காமல் பதினெட்டாம் படி ஏறிச் சென்றனர்.

தமிழக பக்தர்கள் குறைவான அளவில் வருவதே சபரிமலையில் கூட்டம் இல்லாமல் இருக்க காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் பலர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள முடியாக நிலை ஏற்பட்டிருக்கிறது. மழை மற்றும் புயல் அச்சுறுத்தல் நீங்கியபிறகு தமிழகத்தில் இருந்து வழக்கம்போல் அதிக பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வருகின்ற 19-ந்தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்குவது வழக்கம்.

Image புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, உட்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார்



Whatsaap Channel


சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரடி சவால்

சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரடி


திருச்செந்தூர்: கடல் அரிப்பால் பக்தர்கள் புனிதநீராட சிரமம்

திருச்செந்தூர்: கடல் அரிப்பால் பக்தர்கள் புனிதநீராட


ஈரோட்டில் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி

ஈரோட்டில் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு


அந்தியோதயா எக்ஸ்பிரஸ் வந்த போது மூடப்படாத நாங்குநேரி ரெயில்வே கேட்

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் வந்த போது மூடப்படாத நாங்குநேரி ரெயில்வே


அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்திய காதலி... ஆத்திரத்தில் காதலன் செய்த வெறிச்செயல்

அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்திய காதலி... ஆத்திரத்தில் காதலன் செய்த



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக சென்னை அதிமுக அண்ணாமலை Chennai Annamalai தமிழக வெற்றிக் கழகம் கனமழை பாஜக Tamil Nadu திருமாவளவன் MK Stalin ADMK BJP சீமான் தவெக மாநாடு AIADMK Thirumavalavan TTV Dhinakaran இந்திய அணி மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி முக ஸ்டாலின் தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam TVK Conference தமிழக வெற்றிக்கழகம் AMMK வானிலை ஆய்வு மையம் indian cricket team Seeman Northeast Monsoon தீபாவளி Sengottaiyan PMK அன்புமணி ராமதாஸ் மழை Anbumani Ramadoss Rain நயினார் நாகேந்திரன் டிடிவி தினகரன் திருச்செந்தூர் Thoothukudi VCK காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் Tirunelveli தவெக விஜய் தென்காசி பாமக GetOut Stalin M.K. Stalin பிரதமர் மோடி அமரன் வானிலை IMD TVK Vijay விசிக நடிகை கஸ்தூரி Edappadi Palaniswami பாலியல் தொல்லை திருநெல்வேலி Nellai Congress விடுமுறை நெல்லை மதுரை தமிழகம் கோலிவுட் திமுக அரசு இந்தியா GetOut Modi Ind vs Nz Udhayanidhi Stalin Nainar Nagendran சட்டசபை தேர்தல் Ajith rain தனுஷ் Tiruchendur வாஷிங்டன் சுந்தர் கைது Washington Sundar தூத்துக்குடி Heavy Rain