மத்தியில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2014-ம் ஆண்டு முதல் முறையாக மோடி பிரதமரான போது நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் அஜித் தோவல். 2019-ம் ஆண்டில், மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சியில், அஜித் தோவல் இந்த பதவிக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார்.
தற்போது 3-வது முறையாக பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அஜித் தோவலுக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி மாவட்டத்தில் உள்ள கிரி கிராமத்தில் 1945-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி பிறந்த அஜித் தோவல், கேரள கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் உளவு அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
பஞ்சாப், மிசோரம் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் திறம்பட பணியாற்றியவர். காந்தகார் விமானக் கடத்தல், புல்வாமா தாக்குதல் என நெருக்கடியான நேரத்திலும் சிறப்பாக செயல்பட்டவர். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!