INDIAN 7

Tamil News & polling

கள்ளக்காதலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்!

By E7 Tamil 29 ஜூன் 2024 04:34 AM
Nature

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). பெயிண்டரான இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயசாந்தி (41). இவர், வண்ணாரப்பேட்டை சிமெண்டரி சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சரவணன் வெளிநாட்டில் வேலை செய்தபோது, சம்பளத்தை மணலி புதுநகரில் உள்ள தனது தங்கையின் கணவரான மற்றொரு சரவணன் (40) என்பவருக்கு அனுப்பி வைத்தார். அவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். அந்த பணத்தை விஜயசாந்தி வீட்டில் கொடுக்க அடிக்கடி சென்று வந்ததால் இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்த பெயிண்டர் சரவணன், மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மனைவியை கண்டித்ததோடு அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடன் கள்ளக்காதலை தொடரும்படி மெக்கானிக் சரவணனும் விஜயசாந்தியை வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த விஜயசாந்தி நேற்று முன்தினம் வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயசாந்தி உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயசாந்தியின் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அவர், "என் சாவுக்கு என் கணவர் சரவணன் மற்றும் என்னுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட உறவினரான சரவணன் ஆகியோர்தான் காரணம்" என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், விஜயசாந்தியின் கணவரான பெயிண்டர் சரவணன் மற்றும் அவரது உறவுக்காரரான மெக்கானிக் சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Whatsaap Channel


Image குருவாயூர்-சென்னை விரைவு ரெயில் (வண்டி எண்: 16127-16128) தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பகல் நேர ரெயிலாக உள்ளது. இந்த ரெயில் கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில், இருமார்க்கங்களிலும் நிற்காமல்

Image சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மேற்கு–வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு

Image புதுடெல்லி, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்தது. தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று

Image சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்ட நிலையில், முதல் சுற்று மழை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் வங்கக்கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த

Image சென்னை, சென்னை புழுதிவாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமியை, கடந்த 9-ந்தேதி வகுப்பறையில் பேனாவின் மையை கீழே கொட்டியதாக கூறி

Image திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 21). இவர் பி.பி.ஏ. முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியை

Image சென்னை, சென்னையில் 25.10.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Image வங்கக் கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. மேலும் தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையும் என சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது.

வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில் மனு

வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில்


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு


குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று


திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா


பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த



Tags

விஜய் DMK Vijay அதிமுக TVK திமுக ADMK சென்னை கனமழை திருமாவளவன் தவெக பாஜக வடகிழக்கு பருவமழை அண்ணாமலை Chennai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon Annamalai தமிழக வெற்றிக் கழகம் BJP Thirumavalavan தவெக மாநாடு MK Stalin சீமான் தீபாவளி வானிலை ஆய்வு மையம் AIADMK தமிழக வெற்றிக்கழகம் PMK Seeman TVK Conference முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV Dhinakaran இந்திய அணி தமிழக அரசு மு.க.ஸ்டாலின் Edappadi Palaniswami indian cricket team Tamil Nadu AMMK மழை விசிக பிரதமர் மோடி Tamilaga Vettri Kazhagam Anbumani Ramadoss Rain பாமக PM Modi அன்புமணி ராமதாஸ் தவெக விஜய் செங்கோட்டையன் Udhayanidhi Stalin தமிழ்நாடு Ajith வேட்டையன் VCK Rajinikanth IMD காங்கிரஸ் இந்தியா ராமதாஸ் Ind vs Nz நடிகை கஸ்தூரி அமரன் TVK Vijay GetOut Stalin rain Ramadoss Tirunelveli திமுக அரசு GetOut Modi ரஜினிகாந்த் தனுஷ் Sengottaiyan திருநெல்வேலி M.K. Stalin Heavy Rain Vettaiyan விடுமுறை மதுரை கோலிவுட் வானிலை திருச்செந்தூர் கைது நயினார் நாகேந்திரன் டிடிவி தினகரன்