சுதந்திர தினத்தையொட்டி சாதி, மத, மொழி மற்றும் இன வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து நம் தாய் திருநாடு விடுதலைபெற்ற இந்த இனிய நன்னாளில் நம்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பன்னெடுங்காலமாக நம்நாட்டு மக்களை அடிமைப்படுத்தி வைந்திருந்த ஆங்கிலேயர்களை அடியோடு வெளியேற்றிட தங்களின் இன்னுயிரையும் நீத்து நாட்டிற்கு விடுதலைப் பெற்றுத் தந்த தியாகச்செம்மல்களின் நாட்டுப்பற்றையும், தியாக உணர்வையும் போற்றி வணங்குவதற்குரிய நாளே இந்த சுதந்திரத் திருநாள்.
மக்கள் அனைவரும் இன்று சுவாசிக்கும் சுதந்திரக் காற்றுக்காக தன்னலம் கருதாமல், நாட்டின் நலம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு தங்களின் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தியாகச்சுடர்களை நினைவுகூர்ந்து போற்றுவது நம் அனைவரின் தலையாய கடமையாகும். எண்ணற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள் போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தை பேணிக்காப்பதோடு, சாதி, மத, மொழி மற்றும் இன வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்திட இந்நாளில் உறுதியேற்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!