385-வது சென்னை நாள்

By Admin | Published in செய்திகள் at ஆகஸ்ட் 22, 2024 வியாழன் || views : 413

385-வது சென்னை நாள்

385-வது சென்னை நாள்

இன்று (ஆகஸ்ட் 22) 385-வது சென்னை நாள் கொண்டாடப்படுகிறது. தற்போதைய சென்னை நகரம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் நகரமாக உருவானதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை நாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

17-வது நூற்றாண்டில் தற்போதைய சென்னை நகரப் பகுதி, மதராஸப்பட்டினம் என்ற பெயரில் விஜயநகர பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது. மதராஸப்பட்டினத்தை 22 ஆகஸ்ட் 1639-ல் வாங்கியது கிழக்கிந்திய கம்பெனி. அதன் பிறகு 1640-ல் கடலோரத்தை ஒட்டி புனித ஜார்ஜ் கோட்டை கட்டும் பணி தொடங்கப்பட்டு 1644-ல் கட்டி முடிக்கப்பட்டது.

புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் நகரம் உருவானது. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் மெட்ராஸ் மாகாணத்தின் தலைநகராக விளங்கியது மெட்ராஸ் நகரம்.சுதந்திரத்துக்கு பிறகு 1950-களில் மேற்கொள்ளப்பட்ட மாநில மறுசீரமைப்பில் ஆந்திர பிரதேசம், கேரளா, கர்நாடகம், மெட்ராஸ் என தனித்தனி மாநிலங்கள் உருவாகின. இதில் மெட்ராஸ் மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது மெட்ராஸ் நகரம்.

அன்றைய அண்ணா தலைமையிலான திமுக அரசால் 14 ஜனவரி 1969-ல் மெட்ராஸ் மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. பிறகு, 17 ஜூலை 1996-ல் மெட்ராஸ் நகரை சென்னை என்று பெயர் மாற்றியது தமிழக அரசு.

சென்னை நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, `சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை! இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்! பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்!’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

TAMIL NADU CHENNAI MADRAS MK STALIN TAMIL NADU GOVERNMENT
Whatsaap Channel
விடுகதை :

பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?


விடுகதை :

எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?


விடுகதை :

பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?


பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு: தமிழகம் எங்கே போகிறது? - அன்புமணி ராமதாஸ் வேதனை

பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு: தமிழகம் எங்கே போகிறது? - அன்புமணி ராமதாஸ் வேதனை

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்


ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்

ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல  - உயர்நீதிமன்றம்


கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி

கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்


நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி

நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next