சென்னை:
தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் செய்யப்பட்ட மது விற்பனை மூலம் கடந்த ஆண்டு (2023-2024) ரூ.45 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.123 கோடியும், மாதத்துக்கு ரூ.3,698 கோடியும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
ஆனால், கொரோனா காலத்துக்கு பிறகு மது விற்பனை குறைந்து போனதுடன் டாஸ்மாக் நிறுவனமும் நஷ்டத்தில் இயங்கத் தொடங்கத் தொடங்கியது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் (மதுப் பிரியர்கள்) நன்மதிப்பை பெறும் வகையில், டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.