Tamil News & polling
இந்தியாவின் மிகப்பெரிய பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா இன்று காலமானார். மோசமான உடல் நிலை காரணமாக இன்று மாலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவில் மரணமடைந்தார். வயது முதிர்ச்சி காரணமாக கடந்த வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கடந்த திங்கட்கிழமை மருத்துவமனைக்கு சென்று வந்த அவர், இன்று அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
86 வயதான ரத்தன் டாடா மிகவும் வெற்றிகரமான வணிகர்களில் ஒருவராக வலம்வந்தார். அவரது சேவை பணி மற்றும் தொலைநோக்கு பார்வைக்காக எல்லோராலும் பரவலாக அறியப்பட்டவர். மிகவும் சேவை மனப்பாங்கு கொண்டவர். இவரை பிடிக்காதவர்கள் உலகில் யாரும் இருக்கமாட்டார்கள். இதன் காரணமாகவே மிகப்பெரிய வணிக சம்ராஜ்ஜியத்தை வளர்த்தியுள்ளார்.
ரத்தன் டாடா பிறப்பு விவரம்
உப்பு விற்பனை, கைக்கடிகாரம், மோட்டார் வாகனத்துறை, விமான நிறுவனம், மென்பொருள் நிறுவனம் என பல்வேறு தொழில்களில் கோளாச்சி வரும் டாடா குழுமத்தை நிறுவிய டாடாவின் கொள்ளு பேரன் தான் ரத்தன் டாடா. அவர் மும்பையில் 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி அன்று நாவல் டாடா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
ரத்தன் டாடா கல்வி விவரம்
மும்பை மற்றும் சிம்லாவில் பள்ளி படிப்பை முடித்தார். இவருக்கு பத்து வயது இருக்கும்போதே இவரின் பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். பிறகு பாட்டியின் அரவணைப்பில் ரத்தம் டாடா வளர்ந்திருக்கிறார். 1962 இல் அமெரிக்காவில் கார்னல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியலில் பிஎஸ்சி பட்டம் பெற்றார். அதன்பிறகு 1975இல் ஹார்போர்ட் வணிக கல்லூரியில் உயர் மேலாண்மை பட்டம் பெற்றார்.
டாடா குழுமத்தில் ரத்தன் டாடா
அதே ஆண்டில் தேடிவந்த ஐபிஎம் நிறுவனத்தின் வேலைவாய்ப்பை நிராகரித்து விட்டு டாடா குழுமத்தில் இணைந்த ரத்தன் டாடா, ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் பயிற்சியாளராக தனது பணியை தொடங்கினார். 1971இல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்த நாள்கோ எனப்படும் நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக் நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டார். ரத்தன் டாடாவின் ஆலோசனைகளால் வளர்ச்சி பாதைக்கு திரும்பிய நாள்கோ நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 2000 கோடி கடந்துள்ளது.
30 வருட அயராது கடின உழைப்பின் வெற்றிக்கு பின்னர் 1991 ஆம் ஆண்டு ஜெஆர்டி டாடாவிடமிருந்து டாடா குழும தலைவர் பொறுப்பை பெற்றார். அதன்பின் டாடா குழுமத்தின் வணிகங்களை உலகமயமாக்குவதில் அதிக கவனம் செலுத்தினார். முக்கிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் கையகப்படுத்தியது. இதன் மூலம் ஒட்டுமொத்த உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் ரத்தன் டாடா.
டாடா நானோ கார் அறிமுகம்
இவரது கனவு திட்டமான நானோ கார் 2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர் இந்திய குடும்பங்களின் கனவாக இருக்கும் கார் மோகத்தை நினைவாக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திலேயே அதன் உற்பத்தி நின்றுவிட்ட போதும் இந்தியாவில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட மிகக் குறைந்த விலையிலான கார் என்றால் அது டாடா நானோ கார் தான். இதன் மூலம் தனது நிறுவனத்திற்கு மட்டுமின்றி நாட்டுக்காகவும் தொலைநோக்குப் பார்வையை கொண்டவர் என்பதை நிரூபித்தார்.
ஓய்வு பெற்ற ரத்தன் டாடா
டிசம்பர் 2012இல் டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து ரத்தன் டாடா ஓய்வு பெற்றார். அவரது பதவி காலத்தில் டாடா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு வளர்ச்சி அடைந்திருந்தது. 1991இல் வெறும் பத்தாயிரம் கோடியாக இருந்த நிறுவனத்தின் உற்பத்தி மதிப்பு 2012ல் 8 லட்சம் கோடி ரூபாயை கடந்தது. அவருக்கு பின்பு டாடா குழுமத்தின் தலைவராக பதவியேற்ற சைரஸ் மிஸ்டரி பல பிரச்சனைகளுக்கு பின்பு வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, அக்டோபர் 2016 முதல் இடைக்கால தலைவராக ரத்தன் டாடா சிறிது காலம் பணியாற்றினார். டாடா குழுமத்தின் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்ட நிலையில், ரத்தன் டாடா ஜனவரி 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK ADMK திருமாவளவன் மு.க.ஸ்டாலின் AMMK அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss தமிழ்நாடு டிடிவி தினகரன் சீமான் Thirumavalavan முக ஸ்டாலின் செங்கோட்டையன் Seeman Sengottaiyan PMK வடகிழக்கு பருவமழை பாமக சட்டசபை தேர்தல் Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam வானிலை ஆய்வு மையம் Congress