Tamil News & POLLING

 

இந்திய அணிக்காக 71 வருடங்கள் கழித்து தனித்துவ சாதனையை படைத்த சர்பராஸ் கான்

1 year ago 19 அக்டோபர் 2024 05:41 PM | views : 148
பெங்களூருவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் போட்டி இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிசப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பேட்டிங் செய்த நியூசிலாந்து ரச்சின் ரவீந்திரா 134, டேவோன் கான்வே 91 ரன்கள் எடுத்த உதவியுடன் 402 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்புடன் போராடி 462 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 35, ரோகித் சர்மா 52, விராட் கோலி 70, ரிஷப் பண்ட் 99, சர்பராஸ் கான் 150 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மார்ட் ஹென்றி 3, வில்லியம் ஓரோர்கே 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இறுதியில் 107 என்ற சுலபமான இலக்கை துரத்தும் நியூசிலாந்து நான்காவது நாள் முடிவில் 0-0 என்ற நிலையில் இருப்பதால் இந்தியா தோல்வி தவிர்க்க போராடுகிறது.

முன்னதாக இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் மொத்த இந்திய பேட்ஸ்மேன்களும் சொதப்பினர். அதில் டக் அவுட்டான இளம் வீரர் சர்பராஸ் கான் 2வது இன்னிங்ஸில் தம்முடைய தவறை திருத்திக் கொள்ளும் வகையில் அற்புதமாக பேட்டிங் செய்தார். குறிப்பாக விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருடன் அவர் ஜோடி சேர்ந்து 136, 177 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

தொடர்ந்து அசத்திய அவர் தனது முதல் சதத்தை அடித்து குறைந்தபட்சம் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார் என்றே சொல்லலாம். அந்த வகையில் நன்றாக பேட்டிங் செய்த அவர் 18 பவுண்டரி 3 சிக்சருடன் 150 (195) ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 71 வருடங்கள் கழித்து “ஒரு போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி 2வது இன்னிங்ஸில் 150+ ரன்கள் குவித்த இந்திய வீரர்” என்ற தனித்துவ சாதனையை சர்பராஸ் படைத்துள்ளார்.



வரலாற்றில் முதலும் கடைசியுமாக 1953ஆம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 0 ரன்னில் அவுட்டான இந்திய வீரர் மாதவ் அப்டே 2வது இன்னிங்ஸில் 163* ரன்கள் குவித்தார். தற்போது 71 வருடங்கள் கழித்து சர்பராஸ் கான் அதே போன்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் ஷிகர் தவானுக்கு பின் (2014ஆம் ஆண்டு ஆக்லாந்தில் 0, 114) நியூசிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி பின்னர் சதமடித்த இந்திய வீரராகவும் சர்பராஸ் சாதனை படைத்துள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK ADMK AMMK டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN MK STALIN எடப்பாடி பழனிசாமி சீமான் முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி கனமழை தமிழகம் PMK ரஜினிகாந்த் பாமக UDHAYANIDHI STALIN காங்கிரஸ் INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி கைது CONGRESS KEERTHY SURESH கொலை EDAPPADI PALANISWAMI SEEMAN சட்டசபை தேர்தல் NELLAI வடகிழக்கு பருவமழை அமமுக திருநெல்வேலி COIMBATORE கோவை தமிழ்நாடு OPS கொரோனா தென்காசி மதுரை TAMIL ACTRESS THOOTHUKUDI TAMILAGA VETTRI KAZHAGAM ELECTION COMMISSION கள்ளக்காதல் MADURAI ஓபிஎஸ் தேவர் பாலியல் தொல்லை வன்னியர் AJITH NORTHEAST MONSOON நெல்லை நாம் தமிழர் கட்சி விடுமுறை தீபாவளி நயினார் நாகேந்திரன் கீர்த்தி சுரேஷ் TAMIL CINEMA ASSEMBLY ELECTIONS திருமாவளவன் டிரெண்டிங் திருப்பரங்குன்றம் தமிழக அரசு THIRUMAVALAVAN டாப் நியூஸ்