தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்!

By Admin | Published in செய்திகள் at செப்டம்பர் 18, 2021 சனி || views : 224

தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்!

தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்!

ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்

தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி என்பவரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டார்.




நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்த வந்த ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவரது பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 18-ந் தேதி காலை 10.30 மணியளவில் ஆர்.என்.ரவியின் பதவியேற்பு விழா நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின். மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் 10.22க்கு ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கட்சியின் மூத்த உறுப்பினர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு 8வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.





புதிய ஆளுநராக பொறுப்பேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு காவல்துறையினர் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், பதவியேற்பு விழா மேடையில் ஆர்.என்.ரவி, ஆர்.என். ரவியின் மனைவி லட்சுமி ரவி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர்கள் இருந்தனர். அவர்களுடன் பாதுகாப்பு அதிகாரிகளும், அதிகாரிகளும் இருந்தனர்.





பின்னர், சரியாக 10.40 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி புதிய ஆளுநராக ஆர்.என்.ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்றுக் கொண்ட பிறகு, ஆர்.என்.ரவிக்கும், அவரது மனைவிக்கும் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் பூங்கொத்து அளித்தும், முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகங்கள் அளித்தும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழா, தேசிய கீதத்துடன் 10.45 மணிக்கு நிறைவு பெற்றது. சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரையில் மட்டுமே இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக இந்த விழாவில் அனைவரும் முகக்கவசம் அணிந்தே பங்கேற்றனர்.




இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாட்டின் அமைச்சர்களும், தமிழக எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. எம்.பி.க்கள், தமிழ்நாடு சட்டமன்ற கட்சி குழுக்களின் தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். எட்டாவது வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அருகில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அமர்ந்திருந்தார். ஆளுநர் பதவியேற்பு விழா நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த விழாவில், ஆளுநருடன் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.


முன்னதாக, தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி நேற்று தமிழ்நாடு வந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் வரவேற்றனர். மேலும், ஆர்.என்.ரவியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.




ரவீந்திர நாராயணன் ரவி என்ற ஆர்.என்.ரவி பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவைச் சேர்ந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள ஆர்.என்.ரவி, ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். மத்திய அரசின் உளவுத்துறையில் பணியாற்றியபோது, வடகிழக்கு பகுதிகளில் பெருமளவில் காணப்பட்ட வன்முறைக்கு எதிராக முக்கிய பங்காற்றியவர் இவர், 2012ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், பிரதமர் அலுவலகத்தின் இணை புலனாய்வு குழு தலைவராக செயல்பட்டார். 2018ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.


பின்னர், வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றிய அனுபவம் நிரம்ப பெற்ற காரணத்தால் அவரை 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந் தேதி நாகலாந்து மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவிட்டார். தற்போது, அவர் தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பு ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, உளவுத்துறையில் பணியாற்றி ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரை, தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்ததற்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனங்களும் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்!1

தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்!2

தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்!3

RN RAVI RAJ BHAVAN MK STALIN TAMILNADU GOVERNOR
Whatsaap Channel
விடுகதை :

பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?


விடுகதை :

வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?


விடுகதை :

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வக்கீல் ஏ.வேலன் தாக்கல்

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்


ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்

ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல  - உயர்நீதிமன்றம்


கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி

கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்


நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி

நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next