INDIAN 7

Tamil News & polling

ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!

By E7 Tamil 05 ஜூன் 2025 06:19 AM
Nature

நேற்று நடந்த ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் யார் என்றால் அது பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்.

இறுதி வரையில் ஆட்டமிழக்காமல் இருந்ததுடன்,கடைசி 20 வது ஓவர் வரையிலும் கூட,எங்கே பஞ்சாப் வென்று விடுமோ என்ற பதட்டத்தை RCB அணிக்கும், ஒருவேளை நாம் வென்று விடுவோமோ என்ற நம்பிக்கையை தான் சார்ந்த பஞ்சாப் அணிக்கும் இறுதி ஓவரின் இறுதி பந்து வரையிலும் தந்து கொண்டே இருந்தார்.

அப்படியான பஞ்சாப் அணியின் ஆகச் சிறந்த நம்பிக்கை கீற்றாக இருக்கும் ஷஷாங்க் சிங் பஞ்சாப் அணிக்குள் தவறுதலாக இடம் பெற்ற வீரர் என்பது தெரியுமா?

2024 ல் ஐபிஎல் அணிகளுக்கான ஏலத்தில் சஷாங் சிங் என்ற பெயரில் இரு வீரர்கள் இருந்தார்கள்.ஒருவர் 19 வயதான இளம் வீரர்.இன்னொருவர் 32 வயதானவர்.இரு வீரர்களுக்குமே இருபது லட்சம் என்ற குறைந்தபட்ச ஏலத் தொகையைத் தான் ஐபிஎல் நிர்வாகம் நிர்ணயம் செய்திருந்தது.

இதில் பஞ்சாப் அணி நிர்வாகம் அந்த 19 வயது ஷஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுப்பதாக நினைத்துக் கொண்டு 32 வயதான சஷாங்கை ஏலத்தில் எடுத்து விட்டது.தொடர்ந்து ஏலம் நடக்கையில் தான் பஞ்சாப் அணி தாங்கள் எடுத்த சஷாங் தாங்கள் எடுக்க நினைத்த ஷஷாங்க் சிங் அல்ல என்பதை உணர்ந்தது.ஆனால் அதற்குள் ஏல விதிமுறைகள் படி காலம் கடந்து விட, பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா,

“நாங்கள் ஏலத்தில் எடுத்த ஷஷாங்க் சிங் வீரரை வைத்துக் கொள்கிறோம்…” என்று அறிவித்தார்.

அந்தத் தவறு,பஞ்சாப் அணிக்கு ஒரு தலை சிறந்த வீரரையும்,இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட ஷஷாங்க் சிங்கிற்கு புதிய வாய்ப்பையும் ஒரே நேரத்தில் திறந்து விட்டது.

அப்படி பஞ்சாப் அணிக்குள் வந்த ஷஷாங்க் சிங் தான் தனக்குக் கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தன் திறனை செயலில் காட்டி,பஞ்சாப் அணியின் முன்னணி வீரராக, நம்பிக்கை நட்சத்திரமாக மாறிப் போனார்….

இயற்கை மிக புதிரானது. நாம் சந்திக்கும் மனிதர்கள்,நம்மை சந்திக்கும் மனிதர்கள், சூழ்நிலைகள்…என சகலத்திலும் நமக்காக ஏதோ ஒன்றை ஒளித்து வைத்திருக்கும்.அதை மட்டும் நாம் கண்டுபிடிக்க வேண்டும்.அது நடந்தால் மற்ற அதிசயங்கள் தானாகவே நடக்கும்…..



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!

56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!


நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த


கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை பலி.

கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை


ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


ஒரு ரூபாய் கேட்டு பெண்ணிடம் ரூ.14 ஆயிரம் மோசடி

ஒரு ரூபாய் கேட்டு பெண்ணிடம் ரூ.14 ஆயிரம்



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக சென்னை அதிமுக அண்ணாமலை கனமழை தமிழக வெற்றிக் கழகம் Chennai Annamalai திருமாவளவன் MK Stalin ADMK Tamil Nadu பாஜக AIADMK தவெக மாநாடு Thirumavalavan சீமான் எடப்பாடி பழனிசாமி இந்திய அணி BJP முக ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை தீபாவளி Seeman Tamilaga Vettri Kazhagam செங்கோட்டையன் தமிழ்நாடு indian cricket team TVK Conference தமிழக வெற்றிக்கழகம் வானிலை ஆய்வு மையம் TTV Dhinakaran Sengottaiyan AMMK மு.க.ஸ்டாலின் Northeast Monsoon PMK Rain அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss மழை காங்கிரஸ் தென்காசி பிரதமர் மோடி பாமக தவெக விஜய் VCK நயினார் நாகேந்திரன் Congress Edappadi Palaniswami Tirunelveli அமரன் GetOut Stalin Thoothukudi வானிலை உதயநிதி ஸ்டாலின் தமிழகம் விசிக பாலியல் தொல்லை மதுரை விடுமுறை TVK Vijay நடிகை கஸ்தூரி IMD திருச்செந்தூர் GetOut Modi திருநெல்வேலி Heavy Rain டிடிவி தினகரன் இந்தியா கோலிவுட் சட்டசபை தேர்தல் rain Ind vs Nz M.K. Stalin தூத்துக்குடி Ajith வாஷிங்டன் சுந்தர் Nainar Nagendran Washington Sundar கைது தனுஷ் திமுக அரசு