Tamil News & polling
நேற்று நடந்த ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் யார் என்றால் அது பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்.
இறுதி வரையில் ஆட்டமிழக்காமல் இருந்ததுடன்,கடைசி 20 வது ஓவர் வரையிலும் கூட,எங்கே பஞ்சாப் வென்று விடுமோ என்ற பதட்டத்தை RCB அணிக்கும், ஒருவேளை நாம் வென்று விடுவோமோ என்ற நம்பிக்கையை தான் சார்ந்த பஞ்சாப் அணிக்கும் இறுதி ஓவரின் இறுதி பந்து வரையிலும் தந்து கொண்டே இருந்தார்.
அப்படியான பஞ்சாப் அணியின் ஆகச் சிறந்த நம்பிக்கை கீற்றாக இருக்கும் ஷஷாங்க் சிங் பஞ்சாப் அணிக்குள் தவறுதலாக இடம் பெற்ற வீரர் என்பது தெரியுமா?
2024 ல் ஐபிஎல் அணிகளுக்கான ஏலத்தில் சஷாங் சிங் என்ற பெயரில் இரு வீரர்கள் இருந்தார்கள்.ஒருவர் 19 வயதான இளம் வீரர்.இன்னொருவர் 32 வயதானவர்.இரு வீரர்களுக்குமே இருபது லட்சம் என்ற குறைந்தபட்ச ஏலத் தொகையைத் தான் ஐபிஎல் நிர்வாகம் நிர்ணயம் செய்திருந்தது.
இதில் பஞ்சாப் அணி நிர்வாகம் அந்த 19 வயது ஷஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுப்பதாக நினைத்துக் கொண்டு 32 வயதான சஷாங்கை ஏலத்தில் எடுத்து விட்டது.தொடர்ந்து ஏலம் நடக்கையில் தான் பஞ்சாப் அணி தாங்கள் எடுத்த சஷாங் தாங்கள் எடுக்க நினைத்த ஷஷாங்க் சிங் அல்ல என்பதை உணர்ந்தது.ஆனால் அதற்குள் ஏல விதிமுறைகள் படி காலம் கடந்து விட, பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா,
“நாங்கள் ஏலத்தில் எடுத்த ஷஷாங்க் சிங் வீரரை வைத்துக் கொள்கிறோம்…” என்று அறிவித்தார்.
அந்தத் தவறு,பஞ்சாப் அணிக்கு ஒரு தலை சிறந்த வீரரையும்,இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட ஷஷாங்க் சிங்கிற்கு புதிய வாய்ப்பையும் ஒரே நேரத்தில் திறந்து விட்டது.
அப்படி பஞ்சாப் அணிக்குள் வந்த ஷஷாங்க் சிங் தான் தனக்குக் கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தன் திறனை செயலில் காட்டி,பஞ்சாப் அணியின் முன்னணி வீரராக, நம்பிக்கை நட்சத்திரமாக மாறிப் போனார்….
இயற்கை மிக புதிரானது. நாம் சந்திக்கும் மனிதர்கள்,நம்மை சந்திக்கும் மனிதர்கள், சூழ்நிலைகள்…என சகலத்திலும் நமக்காக ஏதோ ஒன்றை ஒளித்து வைத்திருக்கும்.அதை மட்டும் நாம் கண்டுபிடிக்க வேண்டும்.அது நடந்தால் மற்ற அதிசயங்கள் தானாகவே நடக்கும்…..

வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு
குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று
திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த
விஜய் DMK Vijay அதிமுக TVK திமுக ADMK சென்னை கனமழை திருமாவளவன் தவெக பாஜக வடகிழக்கு பருவமழை அண்ணாமலை Chennai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon Annamalai தமிழக வெற்றிக் கழகம் BJP Thirumavalavan தவெக மாநாடு MK Stalin சீமான் தீபாவளி வானிலை ஆய்வு மையம் AIADMK தமிழக வெற்றிக்கழகம் PMK Seeman TVK Conference முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV Dhinakaran இந்திய அணி தமிழக அரசு மு.க.ஸ்டாலின் Edappadi Palaniswami indian cricket team Tamil Nadu AMMK மழை விசிக பிரதமர் மோடி Tamilaga Vettri Kazhagam Anbumani Ramadoss Rain பாமக PM Modi அன்புமணி ராமதாஸ் தவெக விஜய் செங்கோட்டையன் Udhayanidhi Stalin தமிழ்நாடு Ajith வேட்டையன் VCK Rajinikanth IMD காங்கிரஸ் இந்தியா ராமதாஸ் Ind vs Nz நடிகை கஸ்தூரி அமரன் TVK Vijay GetOut Stalin rain Ramadoss Tirunelveli திமுக அரசு GetOut Modi ரஜினிகாந்த் தனுஷ் Sengottaiyan திருநெல்வேலி M.K. Stalin Heavy Rain Vettaiyan விடுமுறை மதுரை கோலிவுட் வானிலை திருச்செந்தூர் கைது நயினார் நாகேந்திரன் டிடிவி தினகரன்