INDIAN 7

Tamil News & polling

சென்னையில் 5-ம் வகுப்பு மாணவியை கடுமையாக தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

24 அக்டோபர் 2025 12:10 PM | views : 70
Nature

சென்னை,

சென்னை புழுதிவாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமியை, கடந்த 9-ந்தேதி வகுப்பறையில் பேனாவின் மையை கீழே கொட்டியதாக கூறி பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். தரையை துடைப்பதற்கு பயன்படுத்தப்படும் மாப்பை வைத்து சிறுமியை தலைமை ஆசிரியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில், சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை இந்திரா காந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 5-ம் வகுப்பு மாணவியை கடுமையாக தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை,

Image சென்னை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிராபகர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்தநிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜே.சி.டி.பிரபாகர். 2011 சட்டமன்ற



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்