Tamil News & POLLING
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. அதன்படி திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், அமமுக வேட்பாளர்கள் மரியாதை நிமித்தமாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தனர். இது குறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இன்றைய தினம் சென்னையில், என்.டி.ஏ கூட்டணியின் தோழமைக்கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர்கள் மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்து உரையாடினர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த வெற்றி வேட்பாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்புகளை புறக்கணித்துள்ள இந்த விடியா திமுக ஆட்சியை அகற்றி, நம் என்.டி.ஏ கூட்டணியின் ஆட்சியை நிறுவ அனைவரும் ஒற்றுமையுடனும் அயராத உழைப்புடனும் செயல்பட வேண்டுமென உற்சாகப்படுத்தினேன்.
இந்த நிகழ்வில் பாஜக மாநில துணைத்தலைவர் ஜெயபிரகாஷ் உடன் இருந்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« முந்தைய செய்தி (Previous)
தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; விருத்தாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டி...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: