தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் சீமான் போட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அதமுக 3ம் இடத்திற்கும், நாம் தமிழர் கட்சி 4ம் இடத்திற்கும் தள்ளப்பட்டது.

அதிமுக படுதோல்வியை தழுவிய நிலையில், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதனால், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர்.

தற்போது விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளதால் விராலிமலை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் ராஜினாமா, திருச்சி கிழக்கு தொகுதி உட்பட தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், இடைத்தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் அவர் கூறுகையில்," இடைத்தேர்தலில் காலியாக உள்ள 6 தொகுதிகளில் நான் ஏதேனும் ஒன்றில் போட்டியிட வேண்டுமென்பது நாதகவினரின் விருப்பம்.

பிற கட்சியினரின் விருப்பமும் இதுவாக இருக்கிறது.

இதுதொடர்பான ஆலோசனையில் அம்பாசமுத்திரம் உகந்ததாக இருக்குமென்று முடிவு செய்து போட்டியிடயிருக்கிறேன்.

மற்ற தொகுதிகளில் நாதக வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள்" என்றார்.

இதன்மூலம், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel