வி.சி.க. கட்சி கொடி கம்பத்தை வெட்டி வாய்க்காலில் வீசியதால் பதற்றம்!

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் கட்டாநகரம் 41-வது முகாமில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி நடப்பட்டிருந்தது. நேற்று இரவு விஷமிகள் இந்த கொடி கம்பத்தை வெட்டி அருகே இருந்த வாய்க்காலில் வீசி இருக்கின்றனர். மேலும் கொடி கம்பத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியும் கிழித்து வீசப்பட்டது.

இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் குவிந்து சாலைமறியல் போராட்டம் நடத்தினர். மேலும் ஜாதிவெறி பிடித்த கயவர்கள் மீது போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது சமூக வலைதளப் பக்கத்தில், விடுதலைச்சிறுத்தைகள் கொடிக்கம்பத்தை நள்ளிரவில் திருட்டுத்தனமாக உடைத்துப்போட்டிருக்கிறார்கள். கும்பகோணம்-திருவிடைமருதூர் அருகே கட்டாநகரத்தில் இச்சாதி வெறியாட்டம் நிகழ்ந்துள்ளது. சிறுத்தைகளின் சாலைமறியலுக்குப் பின்னும் சாதிய சமூகவிரோதிகள் கைது செய்யப்படாதது கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார். பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel