Tamil News & POLLING

 

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஜோடியாக கைது!

4 years ago 04 ஜனவரி 2022 04:12 PM 164 views
ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் மதுரையை சேர்ந்தவ டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை போலீசார் செவ்வாய்க்கிழமை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவருடன், அவது நண்பர் சிக்கா என்கிற டிக்கந்தரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவர் அடிக்கடி ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடீயோ வெளியிட்டு வந்துள்ளார். ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் பெண்கள் குழு ஒன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் குறித்து ரவுடி பேபி சூர்யா ஆபமாக தகாத முறையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் கைது செய்துள்ளனர்.

பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக ரவுடி பேபி சூர்யா தகாத முறையில் ஆபாசமாக பேசியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் சூர்யாவும், அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தரும் அந்த பெண்ணை தகாத முறையில் யூ டியூபில் விமர்சித்துள்ளனர்.

ரவுடி பேபி சூர்யா தன்னை அவதூறாகவும் ஆபாசமாக பேசியது குறித்து அந்த பெண்ணும் அவரது கணவரும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஜெயதேவி விசாரித்து வந்தார்.

இந்த நிலையில், மதுரை அருகே ரவுடி பேபி சூர்யா மற்றும் நண்பர் சிக்கந்தரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவருடன் அவரது நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் போலிசார் கைது செய்துள்ளனர். ஆபாசமாக பேசி அவதூறு செய்த வழக்கில் டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவும் அவருடைய நண்பர் சிக்காவும் ஜோடியாக கைது செய்யப்பட்டுள்ளது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI ADMK AIADMK AMMK TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN தமிழகம் சீமான் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் PMK ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ரஜினிகாந்த் கனமழை காங்கிரஸ் இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் பாமக UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி கைது அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION CONGRESS EDAPPADI PALANISWAMI NELLAI SEEMAN வடகிழக்கு பருவமழை கோவை அமமுக கொலை KEERTHY SURESH சட்டசபை தேர்தல் திருநெல்வேலி நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM COIMBATORE OPS கள்ளக்காதல் வன்னியர் மதுரை தென்காசி தமிழ்நாடு TAMIL ACTRESS THIRUMAVALAVAN TAMIL CINEMA விடுமுறை திருமாவளவன் திருப்பரங்குன்றம் நயினார் நாகேந்திரன் ஓபிஎஸ் டாப் நியூஸ் நாம் தமிழர் கட்சி தேவர் MADURAI பாலியல் தொல்லை AJITH தீபாவளி 2024 T20 WORLDCUP டிரெண்டிங் NORTHEAST MONSOON கீர்த்தி சுரேஷ் நாடாளுமன்ற தேர்தல் ELECTION COMMISSION தமிழக அரசு THOOTHUKUDI கொரோனா