முதல்வரை சந்திக்க சென்ற போலி சிறைத்துறை வார்டன் கைது!

முதல்வரை சந்திக்க சென்ற போலி சிறைத்துறை வார்டன் கைது!

  டிசம்பர் 02, 2022 | 12:47 am  |   views : 1804


திமுக கட்சியின் பல்வேறு அணிகளுக்கான நிர்வாகிகள் பொறுப்பு சேர்க்கை முடிவடைந்த நிலையில்  அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நிர்வாகிகள் வாழ்த்து பெரும் நிகழ்வு நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியின் போது மர்ம நபர் ஒருவர் சஃபாரி உடையில் கடும் போலீஸ் பாதுகாப்பையும் மீறி முதல்வர் அமர்ந்திருந்த மேடை அருகில் சென்றுள்ளார். இதனைபார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அந்த மர்ம நபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.



விசாரணையில் அந்நபர்  தானும் காவல்துறை அதிகாரி தான் எனக்கூறி தமிழ் நாடு காவல்துறை ஐ.டி கார்டை காண்பித்துள்ளார். ஆனால் அவரின் பேச்சு சந்தேகமளிக்கவே முதல்வர் பாதுகாப்பு அதிகாரிகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அந்த நபர் கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார்(42) என்பது தெரியவந்தது. மேலும், அந்த நபர் பொள்ளாச்சி கிளை சிறைச்சாலையில் வார்டனாக இருப்பதும் தெரியவந்தது.



போலீசாரின் தொடர் விசாரணையில் நேற்று அதிகாலை கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து விமான மூலம் தனது நண்பர் நாட்ராயன் என்பவரோடு சென்னைக்கு வந்துள்ளார். பின்பு காலை  08:30 மணி அளவில் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டுக்கு சென்று அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டு பின்னர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்திப்பதற்காக அறிவாலயம் வந்துள்ளார் என்பதும் பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன்னை போலீஸ் எனக்கூறி சென்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.



Also read...  அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு




மேலும், தமிழ்நாடு காவல்துறை ஐடி கார்டை போலியாக வைத்துக்கொண்டு முதல்வரை சந்திக்க முயற்சி செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து, தன்னை பொது ஊழியராக போலியாக காட்டிக் கொள்வது, மோசடி உள்நோக்கத்துடன் தான் பொது ஊழியர் என அரசு அதிகாரிகளை நம்ப வைப்பது, பொய்யான ஆவணங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறை துறை வார்டனான வசந்தகுமாரை கைது செய்தனர். பின்னர் மேஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் போலீசார் வசந்தகுமாரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

2024-04-25 06:32:52 - 5 hours ago

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்


நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி

2024-04-24 07:34:24 - 1 day ago

நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி பெங்களூரு,கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியையும், தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாடு 70 ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்து வருகிறது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உள்ளது. 'தாலி'


பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன்

2024-04-24 01:25:25 - 1 day ago

பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம்

2024-04-24 01:23:44 - 1 day ago

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், இருவரையும் கண்டித்து எச்சரித்த நிலையில், காதலனுடன்


அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

2024-04-23 10:43:35 - 2 days ago

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த


கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை

2024-04-19 15:48:51 - 5 days ago

கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என


தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு

2024-04-19 15:40:29 - 5 days ago

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின்


மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன்

2024-04-19 13:42:24 - 5 days ago

மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இந்த நிலையில்,