நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தை நள்ளிரவு 1 மணிக்கு திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாக உள்ளது. குறிப்பாக, ஜனவரி 12ஆம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் வெளியாகிறது.
இந்த நிலையில் முதல் காட்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகள் நள்ளிரவு ஒரு மணிக்கு வாரிசு திரைப்படத்தின் முதல் காட்சியை திரையிட திட்டமிட்டு வருகின்றனர்.
அரசு அனுமதி வழங்கினால் இரவு ஒரு மணிக்கு வாரிசு திரைப்படத்தின் காட்சிகள் திரையிடப்படும். ஏற்கனவே அஜித்தின் துணிவு திரைப்படமும் ஒரு மணிக்கு திரையிடப்படும் என செய்திகள் பரவி வந்தன.
இந்த நிலையில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தின் முதல் காட்சி ஒரு மணிக்கு திரையிட முடிவு என திரையரங்க உரிமையாளர்கள் தங்களுடைய சமூக வலைதளப் பகுதிகளில் பதிவிட்டு வருகின்றனர்.
இருந்தாலும் தமிழக அரசின் அனுமதி கிடைத்தால் மட்டுமே நள்ளிரவு காட்சிகள் திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே முதல் காட்சிகளுக்கான முடிவுகள் இறுதி கட்டத்தை எட்டும்.
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!