பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்.. விடுமுறையை நீட்டித்து அறிவிப்பு!

ஜனவரி 01, 2023 | 04:43 pm | views : 1684
பள்ளிகளுக்கு குளிர் கால விடுமுறையை ஒருவாரம் நீட்டித்து பஞ்சாப் மாநில அரசு விடுமுறையை அளித்துள்ளது.
பஞ்சாப் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறையாக டிசம்பர் 25 (2022) முதல், ஜனவரி 1 (2023) ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் காலநிலை காரணமாக அந்த மாநிலத்தில் இருக்கும் அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 7ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து பஞ்சாப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல 2023 ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிகளுக்கும் குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும் ஜனவரி 2ம் தேதி முதல் 14 வரை சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
Also read... திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை!
ராஜஸ்தான் மாநிலத்திலும் டிசம்பர் 25 முதல் ஜனவரி 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவும் லக்னோவில் டிசம்பர் 31 வரை பள்ளிகளை காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் எதிரொலியாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகளும் பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றி அமைத்துள்ளன.
![]() |
![]() |
![]() |
![]() |
ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைது..!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும்,
தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது;
2019- ல் சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.317 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், நந்தியாலா போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்
முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன?
தேவர், அண்ணாதுரை... நடந்தது என்ன?
மதுரையில் கடவுளை பற்றி அண்ணாதுரை பேசியதும், அதற்கு தேவரின் எச்சரிக்கையும் தமிழக அரசியலில் மிக முக்கியமான வரலாறு.. இந்த செய்தியை பற்றி பல்வேறு கருத்துக்கள் பகிரப்படுகின்றன.
இந்த வரலாறை பற்றி பேசிய அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்..
நான் பேட்டி எடுத்த பல
பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை!
அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் மணியம்மை திருமணம்
9.7.1949ல் நடந்த பெரியார் - மணியம்மை திருமணத்தை கண்டித்து “ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய கட்டுரை :
சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர்
திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை!
ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள் ஆனால் !..
உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.
பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு