INDIAN 7

Tamil News & polling

ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.. அதே கடிதத்தை மீண்டும் அனுப்பிய தேர்தல் ஆணையம்!

02 ஜனவரி 2023 12:16 PM | views : 69
Nature

தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை அதிமுக திருப்பி அனுப்பிய நிலையில், தபால் மூலமாக மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக, தேர்தல் ஆணையம் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை வடிவமைத்துள்ளது.

ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பான செயல்முறை விளக்க கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, அதிமுகவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளபோது, அதிமுக பொதுக்குழு செல்லும் என ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு இடைக்கால தடை பிறப்பிக்காதபோதும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என வந்த கடிதத்திற்கு அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேரில் கடிதம் வழங்கிய போது, ஒருங்கிணைப்பாளர் என யாரும் இல்லை என்று கூறி கடிதத்தை வாங்க மறுத்துவிட்டனர். எனினும், தேர்தல் ஆணைய ஆவணங்களின்படியே அதிமுகவுக்கு கடிதம் அனுப்பியதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்தார்.

இந்நிலையில், அதே கடிதத்தை மீண்டும் தபால் மூலமாக அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:- தவெக vs திமுக என்பதில் ஃபைனலுக்கு வந்துவிட்டோம், அதிமுகவை அட்டாக் செய்ய வேண்டாம். தலைவர் சொன்னதைப்போல தவெக தொண்டர்கள் திமுகவை மட்டும்

Image தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்