தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை அதிமுக திருப்பி அனுப்பிய நிலையில், தபால் மூலமாக மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக, தேர்தல் ஆணையம் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை வடிவமைத்துள்ளது.
ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பான செயல்முறை விளக்க கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, அதிமுகவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளபோது, அதிமுக பொதுக்குழு செல்லும் என ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு இடைக்கால தடை பிறப்பிக்காதபோதும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என வந்த கடிதத்திற்கு அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேரில் கடிதம் வழங்கிய போது, ஒருங்கிணைப்பாளர் என யாரும் இல்லை என்று கூறி கடிதத்தை வாங்க மறுத்துவிட்டனர். எனினும், தேர்தல் ஆணைய ஆவணங்களின்படியே அதிமுகவுக்கு கடிதம் அனுப்பியதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்தார்.
இந்நிலையில், அதே கடிதத்தை மீண்டும் தபால் மூலமாக அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!