ஆந்திராவின் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டாவிற்கு விண்ணப்பித்த பெண்ணிற்கு, தகாத முறையில் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பிய கிராம வருவாய் அதிகாரிக்கு, பெண்ணின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்தனர்.
ஜெகன் அண்ணா காலனி என்ற பெயரில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இலவச வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பி.எல்.புரம் கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் ஜெகன் அண்ணா காலனியில் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்திருந்தார். அந்தப் பெண்ணிற்கு கிராம வருவாய் அதிகாரி பாஸ்கர் நாயுடு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதில் இலவச வீட்டு மனை தேவை என்றால் என்னுடன் ஒரு நாள் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த பெண், அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள், கிராம வருவாய் அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இதனையடுத்து அவர் தலைமறைவானார். இதுகுறித்து தகவல் அறிந்த அனக்காப்பள்ளி காவல்நிலைய போலீசார் கிராம வருவாய் அதிகாரியை கைது செய்வதற்காக தீவிரமாக தேடி வருகின்றனர்.
பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!