Tamil News & polling
திருப்பத்தூர்:சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று காலை வேலை நிமிர்த்தமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மதிய நேரத்தில் பூட்டியிருந்த வெங்கடேசன் வீட்டில் மேற்கூரைகள் பிரிக்கப்பட்டு கிடந்தது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், வெங்கடேசனுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேசன் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர்.
அப்போது முன் அறையில் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.மேலும் பாத்திரங்கள், பேன் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் வீடு முழுவதும் சோதனையிட்டபோது படுக்கையறையில் வாலிபர் ஒருவர் குறட்டை விட்டபடி நன்றாக தூங்கி கொண்டிருந்தார்.படுக்கையறை அருகே மது பாட்டில்களும், பிரியாணி சாப்பிட்ட பொட்டலங்களும் இருந்தன.
போலீசார் அந்த வாலிபரை தட்டி எழுப்பினர். தூக்கத்தில் இருந்து முழித்து கொண்ட அந்த வாலிபர் தன் முன்னே போலீசார் நிற்பதை கண்டு திருதிருவென முழித்தார். அவரிடம் போலீசார் கிடுக்குப்படி விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் வெட்டுக்குளம் அருகே உள்ள மேலசேத்தன்ஏந்தல் கிராமத்தை சேர்ந்த சுதந்திரதிருநாதன் (வயது27) என்பது தெரியவந்தது. பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க வந்த இவர் நேற்று மதியம் பிரியாணி, மதுபாட்டிலுடன் வெங்கடேசனுடன் வீட்டில் ஏறி குதித்துள்ளார்.பின்னர் வீட்டில் திருடிய பொருட்களை மூட்டை கட்டிய சுதந்திர திருநாதனுக்கு பிரியாணியும், மதுவும் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என தோன்றியுள்ளது.
அதன்படி இரண்டையும் சாப்பிட்ட பின் அவனுக்கு போதை தலைக்கு ஏறியது. சிறிது நேரம் கண்ணயர்ந்து விட்டு செல்லலாம் என படுக்கையறையில் சுதந்திரநாதன் தூங்கியது தெரியவந்தது. போலீசார் சுதந்திர திருநாதனை கைது செய்து வா ராஜா!... ஜெயிலில் போயி தூங்கலாம் என்று வேடிக்கையுடன் அழைத்து சென்றனர்.திருட வந்த வீட்டில் வாலிபர் தூங்கி பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவரை கைது செய்த வீடியோவும் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு
குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று
திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த
விஜய் DMK Vijay அதிமுக TVK திமுக ADMK சென்னை கனமழை திருமாவளவன் தவெக பாஜக வடகிழக்கு பருவமழை அண்ணாமலை Chennai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon Annamalai தமிழக வெற்றிக் கழகம் BJP Thirumavalavan தவெக மாநாடு MK Stalin சீமான் தீபாவளி வானிலை ஆய்வு மையம் AIADMK தமிழக வெற்றிக்கழகம் PMK Seeman TVK Conference முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV Dhinakaran இந்திய அணி தமிழக அரசு மு.க.ஸ்டாலின் Edappadi Palaniswami indian cricket team Tamil Nadu AMMK மழை விசிக பிரதமர் மோடி Tamilaga Vettri Kazhagam Anbumani Ramadoss Rain பாமக PM Modi அன்புமணி ராமதாஸ் தவெக விஜய் செங்கோட்டையன் Udhayanidhi Stalin தமிழ்நாடு Ajith வேட்டையன் VCK Rajinikanth IMD காங்கிரஸ் இந்தியா ராமதாஸ் Ind vs Nz நடிகை கஸ்தூரி அமரன் TVK Vijay GetOut Stalin rain Ramadoss Tirunelveli திமுக அரசு GetOut Modi ரஜினிகாந்த் தனுஷ் Sengottaiyan திருநெல்வேலி M.K. Stalin Heavy Rain Vettaiyan விடுமுறை மதுரை கோலிவுட் வானிலை திருச்செந்தூர் கைது நயினார் நாகேந்திரன் டிடிவி தினகரன்