நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

  மார்ச் 15, 2023 | 02:49 am  |   views : 32


புதுடெல்லி : அங்கத்தை அழகு செய்யும் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அசுர வேகத்தில் உயர்ந்துகொண்டே இருக்கிறது.இருப்பினும் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதன் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை.தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது ஒரு புறம் இருக்க தங்கம் இல்லாமல் வணிகம் இல்லை என்கிற நிலையிலேயே உலகப்பொருளாதாரம் உள்ளது.பண்டைய காலத்தில் இருந்தே இதே நிலைதான்.



தங்கம் நுகர்வில் உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் முன்னிலை வகிக்கிறது.கடந்த 2021-2022-ம் ஆண்டில் சுமார் ரூ.3.44 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதுமட்டுமின்றி கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்திய பெரும் பணக்காரர்கள் பலர் அதனை தங்கமாக மாற்ற ஆசைப்படுவதாலும் தங்கத்தின் மீதான நுகர்வு இந்தியாவில் அதிகமாக உள்ளது.இப்படி தங்கத்தின் தேவை இந்தியாவில் அதிகமாக இருப்பதால் துபாய், சிங்கப்பூர் போன்ற தங்கம் விலை குறைவாக உள்ள நாடுகளில் இருந்து கடத்தல்காரர்கள் தங்கத்தை இந்தியாவுக்கு கடத்தி வருகிறார்கள்.



இந்தியாவில் விலை அதிகமாக இருப்பதால் கடத்தல்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. இதற்கிடையே தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரிப்பது, கடத்தல்காரர்களை கடத்தலுக்கு மேலும் தூண்டுகிறது.இப்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் தங்கத்தை சுங்க அதிகாரிகள் அவ்வப்போது பறிமுதல் செய்து வருகிறார்கள். சில நேரங்களில் விமான நிலையத்தில் இருந்து தங்கம் வெளியேறினாலும் ரெயில் நிலையங்களில் பிடிபட்டு விடுகிறது.இதுபோன்ற கடத்தலில் கடந்த 3 ஆண்டுகளில் பிடிபட்ட தங்க விவரங்களை பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர், பத்ம விபூஷண் விருது பெற்ற நடனக்கலைஞர் சோனல் மான்சிங் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்டு இருந்தார்.இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.



அதில், 'கடந்த 3 ஆண்டுகளில் (2020 முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை) நாடு முழுவதும் சுமார் 9 ஆயிரம் கிலோ, அதாவது 8 ஆயிரத்து 956 கிலோ 490 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.நாட்டிலேயே அதிக அளவு கடத்தல் தங்கம் கடந்த 3 ஆண்டுகளில் கேரளாவில்தான் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு ஆயிரத்து 869 கிலோ 290 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டில் ஆயிரத்து 317 கிலோ 430 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.இதனையடுத்து மராட்டிய மாநிலத்தில் ஆயிரத்து125 கிலோ 380 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.வழக்குகளை பொறுத்தவரை நாடு முழுவதும் 9 ஆயிரத்து 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் 2,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.தங்கம் கடத்தலை தடுக்கும் பணிகளை புலனாய்வு அமைப்புகள் ரகசிய தகவல்களின் அடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன' என்று மத்திய மந்திரி தெரிவித்து உள்ளார்.



Also read...  நகைச்சுவை நடிகர் கலக்க போவது யார் கோவை குணா காலமானார்




நகைச்சுவை நடிகர் கலக்க போவது யார் கோவை குணா காலமானார்

2023-03-21 15:07:54 - 3 days ago

நகைச்சுவை நடிகர் கலக்க போவது யார் கோவை குணா காலமானார் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா. இவரது டைமிங்கான காமெடியும் மிமிகிரி செய்யும் திறமை மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர் கோவை குணா. கவுணடமணி, ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் குரலை அப்படியே மிமிக்ரி செய்யும் திறமையையும் கொண்டிருந்தார்.


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்க தடை!

2023-03-19 13:59:00 - 5 days ago

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்க தடை! சென்னை : அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 9 மாதங்களாக பதவி வகித்து வருகிறார்.இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்றும் மனுதாக்கல் நடைபெறுகிறது.பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி


சீனாவின் இறைச்சி கூடத்தில் ரக்கூன் வகை நாய்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

2023-03-18 02:50:34 - 1 week ago

சீனாவின் இறைச்சி கூடத்தில் ரக்கூன் வகை நாய்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு பீஜிங் : கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதுவரை கொரோனா வைரஸ் 75 கோடிக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளது. எனவே இது எவ்வாறு உருவானது என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதன்படி இந்த வைரஸ் முதலில் வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக


நாடு முழுவதும் கூடுதலாக 34 நகரங்களில் 5ஜி சேவை... ஜியோ நிறுவனம் அறிவிப்பு

2023-03-15 15:53:56 - 1 week ago

நாடு முழுவதும் கூடுதலாக 34 நகரங்களில் 5ஜி சேவை... ஜியோ நிறுவனம் அறிவிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ இந்தியாவில் இணையப் புரட்சியை ஏற்படுத்திவருகிறது. தரமான 4 ஜி இணைய சேவையை வழங்கியதன் மூலம் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக ஜியோ உருவெடுத்தது. தற்போது, ஜியோ நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு 5 ஜி சேவையை வழங்கிவருகிறது. இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஜியோ 5 சேவை வழங்கும் எல்லையை அதிகப்படுத்திவருகிறது.


அ.தி.மு.க. தொண்டர்களை ஒருங்கிணைத்து ஒரே அணியாக மாற்றி தி.மு.க.வை வீழ்த்துவோம்- டி.டி.வி.தினகரன்

2023-03-15 13:52:58 - 1 week ago

அ.தி.மு.க. தொண்டர்களை ஒருங்கிணைத்து ஒரே அணியாக மாற்றி தி.மு.க.வை வீழ்த்துவோம்- டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6-வது ஆண்டு தொடக்கவிழா ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது.விழாவில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அங்குள்ள 70 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றினார். அதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு


ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவு - மறைந்த தாயின் காலை பிடித்து அழுத ஓபிஎஸ்

2023-02-25 01:26:43 - 1 month ago

ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவு - மறைந்த தாயின் காலை பிடித்து அழுத ஓபிஎஸ் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் நேற்று மருத்துவமனைக்குச் சென்று அவரது தாயாரைப் பார்த்து வந்தார். அவரது உடல்நிலை


எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் எரிப்பு: பா.ஜ.க.வை சேர்ந்த 4 பேர் கைது

2023-03-07 22:27:48 - 2 weeks ago

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் எரிப்பு: பா.ஜ.க.வை சேர்ந்த 4 பேர் கைது கோவில்பட்டி : பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார், மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணன் ஆகியோர் சமீபத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இருவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். இந்த விவகாரம் பாஜக-அதிமுக கூட்டணியில் சலசலப்பை


வதந்தி பரப்ப மட்டுமே தொழில்நுட்பத்தை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்... முதல்வர் மு.க.ஸ்டாலின்

2023-03-15 02:57:03 - 1 week ago

வதந்தி பரப்ப மட்டுமே தொழில்நுட்பத்தை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்... முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை கெடுப்பதற்காகவும், வதந்தி பரப்பவும் மட்டுமே, சிலர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் BRIDGE கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கல்வி, மருத்துவம், இயற்கை, வானிலை என்று அனைத்திலும் தகவல் தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததாகி விட்டது என்று கூறினார்.